For Daily Alerts
Just In
ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டார் ஜி.கே.மணி- தோப்பில் தங்குகிறார்
இவர்கள் ராமநாதபுரத்தில் தங்குவதற்கு கல்யாண மண்டபங்களோ, பிற இடங்களோ கிடைக்கவில்லை. இதையடுத்து அனைவரும் ஒரு தோப்பில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலை ஜி.கே.மணி தலைமையிலான பாமகவினர் ராமநாதபுரம் காவல் நிலையம் வந்தனர். கோர்ட் உத்தரவின்படி அனைவரும் கையெழுத்து போடுவதற்காக வந்திருந்தனர். ஜி.கே.மணி காவல் நிலையம் உள்ளே சென்று முதலில் கையெழுத்திட்டார்.
பின்னர் மற்றவர்கள் வரிசையில் நின்று கையெழுத்திட்டனர். இவர்கள் 362 பேரும் ராமநாதபுரத்தில் தங்க வேண்டும் என்று ஜாமீன் நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்குவதற்கு ஒரு இடமும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து அனைவரும் ஒரு தோப்பில் பந்தல் போட்டு அங்கு தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.
Comments
English summary
PMK leader G K Mani and 361 party cadres appeared before Ramanadhapuram PS today and signed.
Story first published: Tuesday, May 14, 2013, 15:28 [IST]