ஐபிஎல் பிக்சிங் விவகாரம்.. கவாஸ்கர் கடும் அதிர்ச்சி...
ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், இந்த சம்பவம் எனக்குக் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த ஐபிஎல் நல்ல களம். அவர்களுக்கான பரிசுத்தொகையும் உயர்வானது.. இருந்த போதும் இப்படியும் சில வீரர்கள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அதே நேரத்தில் சிக்கியிருக்கும் வீரர்கள் அப்பாவிகள் என்றால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நாமும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் ஸ்ரீசாந்த் தற்போது இந்திய அணியில் இல்லாமல் இருக்கலாம்.. அவரது பெற்றோருக்கு இது வருத்தமாக இருக்கலாம். அந்த பின்னணியில் அவர் டோணி மற்றும் ஹர்பஜன் மீது புகார் கூறியிருக்கலாம் என புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்றார் அவர்.