பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான பிரபு, விஜயபாண்டி, சரவணன் வழிப்பறி வழக்கில் கைது
மானாமதுரை: பொட்டு சுரேஷ் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீன் பெற்றுள்ள விஜயபாண்டி, சரவணன், பிரபு ஆகியோர் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் சரவணன், பிரபு, விஜயபாண்டி ஆகியோர் சரணடைந்தனர்.
இதில் விஜயபாண்டி அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் ஆவர். சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபு, சரவணன், விஜயபாண்டி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மானாமதுரை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டி.எஸ்.பி. வெள்ளத்துரை வழிப்பறியில் ஈடுபட்ட விஜயபாண்டி, பிரபு, சரவணன் ஆகியோரை கைது செய்து திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு விசாரணை மேற்கொண்ட போலீசார் மூவரையும் மானாமதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்த மூவரையும் வழிப்பறி வழக்கில் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.