For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம் மாவட்டத்தில் பேசக்கூடாது... திருமாவுக்கு தடை! கலெக்டர் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Collector bans Thirumavalavan's meeting in Villupuram
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மரக்காணத்தில் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடந்த 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறைகளில், இதுவரை 340 க்கும் அதிகமான பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னமும் அந்த தடை அமலில் உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் பேசுவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதனையடுத்து பொதுகூட்டம், கருத்தரங்கம் எதையும் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தக்கூடாது.

பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், அமைதியை நிலை நாட்டவும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English summary
Collector has banned VCK leader Thirumavalavan's meetings in Villupuram district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X