41 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் 45 அறிக்கை வாசித்த ஜெ: சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 41 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத் தொடரில் விதி எண் 110ன் கீழ் 45 அறிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா வாசித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா 45 அறிக்கைகளை வழங்கியுள்ளார்.
கச்சத்தீவு தீர்மானம்
கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக -தேமுதிகவின் தொடர் புறக்கணிப்பு
பெரும்பாலான நாட்களை திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணித்தன.
சைன் மட்டும் போட்ட கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு போனார்.
விஜயகாந்த்தைக் காணலியே
எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காமல் முற்றிலுமாக புறக்கணித்தார்.
204 மணி நேரம்q
41 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 204 மணி 10 நிமிடம் அவைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.