For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சி பெண் அரசியல்வாதி சுட்டுக் கொலை

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஈ-இன்சாப் கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதி ஒருவர் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடுவதற்காக 'பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஈ-இன்சாப் ' என்ற புதிய கட்சி ஒன்றினை தொடங்கினார். அதன் மூத்த பெண் அரசியல்வாதியான சாரா சாஹித் ஹுசைன் என்ற பெண்மணி நேற்றிரவு அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், அவர் கொல்லப்பட்டார்.

வீட்டருகே வைத்து, சாரா சாஹித்தை மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கொலைக்கான காரணமும் அறியப்படவில்லை. ஆனால், கட்சித்தலைவர் இம்ரான் கான் எம்.க்யூ.எம் கட்சியைச் சேர்ந்த கான் ஹூசைன் தான் இந்த கொலையின் பின்னணியில் உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

இம்ரான்கானின், இக்குற்றச்சாட்டினை கான் கட்சியினர் மறுத்துள்ளனர்.

கடந்த வாரம் தான் பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நவாஸ் ஷெரீப்பின் கட்சி ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இந்த கொலையின் மூலம் பாகிஸ்தான் அரசியலில் புதிய குழப்பம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A senior female Pakistani politician has been shot dead in the southern port city of Karachi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X