For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது... ரூ.1.28 கோடி பறிமுதல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அகமதாபாத்: அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டத் தரகர் வினோத் என்பவரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், 1.28 கோடி ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் செல்போன் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களை நாடுமுழுவதும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூரில் பல தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வினோத் என்ற தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.28 கோடி பணமும், லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான வினோத் மும்பையைச் சேர்ந்த தரகரிடம் இருந்து எல்.சிபெற்று தரகராக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. வினோத்திற்கு ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங்கில் தொடர்புள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

English summary
Ahmedabad Crime Branch on Saturday arrested bookie Vinod Mulchandani from the Satellite Area of the Gujarat city. Rs 1.28 crore in cash, laptops and mobile phones were seized from his possession.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X