For Daily Alerts
Just In
சென்னை அணி மீது ரூ.10 லட்சம் பெட் கட்டி தோற்ற மெய்யப்பன்
ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன் நேற்று முன்தினம் இரவு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மொத்தம் 9 போட்டிகளில் பெட் கட்டியது தெரிய வந்துள்ளது. அதில் 5 பெட்களில் தோல்வியும், 4 பெட்களில் வெற்றியும் பெற்றுள்ளார்.
சென்னை அணி விளையாடிய ஒரு போட்டியில் அவர் ரூ.10 லட்சம் பெட் கட்டி தோற்றதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சூதாட்டம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெய்யப்பனுக்கும் சென்னை அணிக்கும் தொடர்பில்லை என்றும், அவர் அணி நிர்வாகத்தின் கௌரவ உறுப்பினர் தான் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
CSK CEO Gurunath Meiyappan bet on 9 matches and lost 5 matches. He kept Rs. 10 lakh bet on a CSK match and lost it.