For Daily Alerts
Just In
நோயால் அவதிப்படும் கொள்ளுப் பேரனுக்கு நிதி திரட்ட பாராசூட்டில் இருந்து குதித்த 87 வயது தாத்தா
அமெரிக்காவின் தென்மேற்கு ஒஹாயோவில் உள்ள ஃபேர்பீல்டைச் சேர்ந்தவர் கிளாரன்ஸ் டர்னர்(87). இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட விமானப்படை வீரர். அவரது 10 மாத பேரக்குழந்தை ஜூலியான் கவுச். ஜூலியானுக்கு நுரையீரல் கோளாறு உள்ளதால் கொலம்பஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது.
பேரனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட கிளாரன்ஸ் கடந்த சனிக்கிழமை பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்தார். முன்னதாக அவர் தன்னுடைய 85வது வயதில் பாராசூட்டில் இருந்து குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு அவர் 1944-47ல் ராணுவ வீரராக இருக்கையில் ஜப்பானில் கடைசியாக பாராசூட்டில் இருந்து குதித்துள்ளார்.
Comments
English summary
Clarence Turner, an 87-year old World War II veteran jumped from a parachute in an effort to attract attention for the plight of his ailing 10 month old great grandson.
Story first published: Tuesday, May 28, 2013, 15:15 [IST]