For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் பஸ் நிற்பதற்குள் இறங்கிய அரசு ஊழியர் பலி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பேருந்து நிற்கும் முன்பு கீழே இறங்கிய பொதுப்பணித்துறை ஊழியர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

தண்டையார்பேட்டை ரெட்டை குழு சந்தைச் சேர்ந்தவர் கணேசன்(55). பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்தார். அவர் நேற்று கோயம்பேடு-திருவொற்றியூர் செல்லும் பேருந்தில் ஏறினார். பேருந்து தண்டையார்பேட்டை மணிக்கூண்டு நிறுத்தத்தில் நிற்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் முன்பு கணேசன் திடீர் என்று கீழே இறங்க முயற்சி செய்தார்.

அப்போது அவர் கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளம் ஓடியது. இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Ganesan(55), a PWD employee lost his life as he tried to get down from a bus before it stopped at the Tondiarpet stop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X