மணாலியில் அமெரிக்க பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த 2 பேர்
சிம்லா: மணாலியில் 30 வயது அமெரிக்க பெண்ணை 2 வாலிபர்கள் சேர்ந்து கற்பழித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலமான மணாலியில் உள்ள வஷிஸ்த் பகுதியில் இருக்கும் சில நண்பர்களை சந்திக்க 30 வயது அமெரிக்க பெண் நேற்று முன்தினம் வந்துள்ளார். அவர்களை சந்தித்துவிட்டு மணாலிக்கு திரும்பும்போது 2 வாலிபர்கள் தங்கள் டிப்பர் லாரியில் அவருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை கற்பழித்துவிட்டு அவர் வைத்திருந்த ஐபோன் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அந்த பெண் போலீசில் நடந்தது குறித்து புகார் கொடுத்தார். அந்த 2 பேரும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
போலீசார் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து இது குறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.