For Daily Alerts
Just In
சம்பளப் பாக்கியைக் கொடுங்க.. பவர் ஸ்டார் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்
பவர் ஸ்டார் கடன் பெற்று தருவதாகக் கூறி பலரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் அவருக்குச் சொந்தமான மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்காக வழங்கப்பட்ட காசோலை பணமில்லாமல்
திரும்பியதாகத் தெரிகிறது. இதனையடுத்து ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், மொத்தம் 5 லட்சம் ரூபாய் வரை பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Staffs of Power star Srinivasan's hospital are protesting in Chennai seeking their pending salary.