For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் பயங்கரம்: வாஷிங் மெசினில் போட்டு குழந்தையைக் கொன்ற தாய் தானும் தற்கொலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லி பகுதியில் மண்டவாலி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திர யாதவ். இவரது மனைவி சரிதா(30 ). தேவேந்திர யாதவ். நேற்று காலையில் வேலைக்கு போய்விட்டு இரவில் வீடு திரும்பினார்.

கதவை பல முறை தட்டியுள்ளார். கதவை மனைவி திறக்கவில்லை என்பதால் டெல்லி போலீஸ் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சரிதா தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் கிடந்தார். வீட்டிற்குள் உள் தாழிட்டு தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார் சரிதா.

குழந்தைகளை தேடியபோது வாஷிங் மிஷனில் 6 வயது பெண் குழந்தை இறந்து கிடந்தது, வாளியில் உள்ள தண்ணீரில் 11 மாத ஆண் குழந்தையும் இறந்த நிலையில் கிடந்தன. ஆனால் இவரது அறையில் தற்கொலை கடிதம் எதுவும் இருக்கவில்லை. குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது , செவ்வாய்கிழமை இரவு நேரத்தில் அதிக சப்தத்துடன் வாக்குவாதம் நடந்ததாக தெரிவித்தனர். கணவன் , மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் இந்த கொடூர முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வாஷிங்மிஷனில் மகளை போட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிழக்கு டெல்லி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
Upset over constant fights with her husband, a woman allegedly drowned her two minor children — a five-year-old daughter and an 11-month-old son — before hanging herself at her house in East Delhi’s Mandawali on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X