For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் பிக்ஸிங்.. சென்னை ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் கைது!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஐ.பி.எல். பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனால் மே 30-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் மும்பை போலீஸ் முன்பு விக்ரம் அகர்வால் இதே புகாருக்காக ஆஜராகி இருந்தார்.

பின்னர் கடந்த 5-ந் தேதி 5-ந் விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தமது கணவர் ஆஜராவதற்கு ஒருவார கால அவகாசம் கோரினார். இதனால் விக்ரம் அகர்வால் 8-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பினர். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் போலீசார் முன்பு விக்ரம் அகர்வால் ஆஜரானார்.அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். பின் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

English summary
The Crime Branch-CID of the Tamil Nadu police on Monday arrested Chennai-based hotelier Vikram Agarwal after interrogating him for a whole day in connection with the IPL betting scandal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X