ஜியா கானுக்கு அபார்ஷன் செய்தது சூரஜுக்கு தெரிந்த டாக்டர்
மும்பை: தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கான் இந்த ஆண்டு துவக்கத்தில் கருக்கலைப்பு செய்தது உண்மை தான் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஜியா கான் காதல் தோல்வியால் கடந்த 3ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாகும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் தன்னை தனது காதலர் சூரஜ் கற்பழித்ததாகவும், கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் சூரஜை கைது செய்தனர். இந்நிலையில் ஜியா கருவை கலைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாத்திரை சாப்பிட்டு அபார்ஷன்
ஜியா இந்த ஆண்டு துவக்கத்தில் மாத்திரை சாப்பிட்டு கருவை கலைத்துள்ளார். அவருக்கு மாத்திரை அளித்து கருவை கலைக்க உதவிய மருத்துவரிடம் இருந்து போலீசார் அறிக்கை பெற்றுள்ளனர். அந்த மருத்துவருக்கு சூரஜ் அறிமுகமானவர் தானாம்.
ஆமாம், ஜியாவுக்கு அபார்ஷன் நடந்தது
ஜியா கான் கருவை கலைத்ததை சூரஜ் பஞ்சோலி விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஜியா சகோதரிக்கு தெரியும்
ஜியா கருவை கலைத்தது அவரது சகோதரிக்கு தெரியும் என்று சூரஜ் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அம்மாவுக்கு தெரியாது
தனது மகள் கருவை கலைத்தது தனக்கு தெரியாது என்று ஜியா கானின் தாய் ராபியா தெரிவித்துள்ளார்.