Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூறாவளியால் தொட்டில் பறந்து சென்று விழுந்ததில் 3 மாத ஆண் குழந்தை பலி

Subscribe to Oneindia Tamil

தேனி: போடி அருகே சூறாவளி காற்றில் தொட்டில் பறந்ததில் அதில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத குழந்தை பலியானது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலையைச் சேர்ந்தவர் சிவகுமார்(26). சுண்ணாம்பு காளவாசல் நடத்தி வருகிறார். அவரது மனைவி போதுமணி(23). அவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. அந்த தம்பதிக்கு காளிரத்தினம் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் இரவு குழந்தையை வீட்டின் முன்பகுதியில் உள்ள தகர ஷெட்டில் இருந்த தொட்டிலில் தூங்க வைத்துள்ளனர். அப்போது திடீர் என்று சூறாவளிக் காற்று வீசியது. இதில் தகரக் கூரையுடன் தொட்டிலும் சேர்ந்து பறந்தது. சிறிது தூரம் பறந்து தொட்டில் ஒரு இடத்தில் கீழே விழுந்தது. இதில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காளிரத்தினம் பரிதாபமாக பலியானது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+