கோவில் விழாவில் குண்டக்க மண்டக்க டான்ஸ்.. 2 ஊர் நாட்டாமைகள் உள்பட பலர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கவர்ச்சிகரமான பெண்களை வைத்து சினிமாப் பாட்டுக்கு ஆபாச டான்ஸ் ஆட வைத்த இரண்டு ஊர் நாட்டாமைகள் உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பில்லியானூர் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா நடந்தது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக பாடல்கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர்.
அப்போது, திரைப்பட பாடல்களுக்கு ஏற்றபடி ஆண்கள் பெண்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. ஒரு கட்டத்தில், அழகிகள் மட்டும் நடனமாடிய ஆபாச நடனங்கள் இடம் பெற்றிருந்தது.
இதைப் பார்த்த பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கூசிப் போயினர். இதுகுறித்து போலீஸாருக்குப் புகார் போனது. உடனே போலீஸார் விரைந்து வந்தனர். ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்தது நாட்டாமை சின்னத்தம்பி, பிரபு, ராஜா ஆகியோர் என்று தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதேபோல, இதேபோல, போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் கோவில் திருவிழாவிலும் ஆபாச நடனம் போட்டிருந்தனர். இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த நாட்டாமைகள் அன்பு, சரவணன், வெங்கடேசன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
மேலும் 6 அழகிகள் உள்பட 16 பேரும் கைதானார்கள். கைது செய்யப்பட்ட 21 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அத்தனை பேரும் சிறையில் அடைத்தனர்.