குஜராத் மாநில் அரசு சிறப்பாக செயல்படுகிறது: மான்டேக்சிங் அலுவாலியா பாராட்டு!
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று டெல்லி சென்றிருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நேற்று டெல்லிக்கு முதல் முறையாக சென்றதால் அக்கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர்மத்திய திட்ட குழுவின் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் முடிவில் குஜராத் மாநிலத்துக்கு ரூ59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆண்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, திட்டக்குழுவிடம் ரூ 58 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீட்டை கேட்டிருந்தோம். ஆனால் குஜராத் மாநிலம் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதாக் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
இதே போல் செய்தியாளர்களிடம் பேசிய அலுவாலியா. குஜராத் மாநிலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜரார்த் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் அம்மாநில் அரசு சமூக நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்றார்.