For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல் குறித்து ஜூன் 21 செயற்குழுவில் முடிவு! பார்லி. தேர்தலில் தனித்துப் போட்டி- அன்புமணி

By Mathi
Google Oneindia Tamil News

RS polls: Decision will taken in state executive on June 21- Anbumani Ramadoss
தருமபுரி: ராஜ்யசபா தேர்தல் குறித்து ஜூன் 21-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள பாமகவின் செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்... லோக்சபா தேர்தலில் பாமக தனித்துப் போடடியிடும் என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தருமபுரியில் பாமக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும். தற்போது நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து சென்னையில் நடைபெறும் 21ந் தேதி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

பாட்டாளி மக்கள் கட்சி மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். திமுக, அதிமுகவுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார் அவர்.

ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரை பாமக எம்.எல்.ஏக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸை நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
PMK youth wing leader Anbumani Ramadoss said on Rajya Sabha elections, his party's final decision will be taken in state executive meeting on June 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X