For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை தம்பதியை கடத்திய 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தம்பதியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இலங்கை சேர்ந்த தவராஜ்- ஜலஜா தம்பதியை கடந்த மே 29ஆம் தேதி சென்னையில் மர்ம கும்பல் கடத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடினர். இதனையடுத்து கடலூர் மாவட்டம் மந்தாரப்குப்பம் அருகே ஜூன் 2ம் தேதி இலங்கை தம்பதியர் மீட்கப்பட்டனர். இந்த கடத்தலில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Kidnappers of Lankan couple slapped with NS act

இந்த நிலையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் 8 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டனர்.

English summary
Police have booked the kidnappers of the Lankan Tamil couple under Nationa security act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X