நடத்தையில் சந்தேகம்... மனைவியைக் கொன்றார் கணவர்
மதுராந்தகம்: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்துக் கொன்று விட்டார் கணவர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி பெயர் ஜானகி. 40 வயதான ஜானகி மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். தினசரி வெளியூர்களுக்குப் போய் வியாபாரம் செய்து வந்தார்.
தினசரி இரவுதான் வீடு திரும்புவார் ஜானகி. இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட ஆரம்பித்தார் தேவதாஸ். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை நடக்குமாம்.
சம்பவம் நடந்த நாளன்றும் சண்டை மூண்டுள்ளது. அப்போது உருட்டுக்கட்டையால் அடித்து விட்டார் மனைவியை. இதில் ஜானகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைப் பார்த்து பயந்து போன தேவதாஸ் அங்கிருந்து ஓடி விட்டார்.
போலீஸார் விரைந்து வந்து ஜானகியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாகி விட்ட தேவதாஸைப் போலீஸார் தேடி வருகின்றனர்.