For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புருஷன், பொண்டாட்டி சண்டையை விலக்கி விட்டது தப்பாப்பா?.. வாலிபருக்கு சரமாரி அடி!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவிக்கு இடையே நடந்த சண்டைய விலக்கி விட முயன்றார் வாலிபர் ஒருவர். ஆனால் அவரை கணவர் தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.

விளம்பாவூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். 28 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு வீடடில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலு என்பவருக்கும், அவரதுமனைவி வேம்புவுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.

வாய்ச்சண்டை அப்படியே அடிதடியாக மாறியது. இதைப் பார்த்த சக்திவேலு அவர்களை விலக்கப் போனார். நீ யார்டா சண்டைய விலக்க என்று கோபமடைந்த வேம்புவின் கணவர் பாலு, சக்திவேலுவைப் போட்டுசரமாரியாக அடித்து உதைத்தார். இதில் சக்திவேல் படுகாயமடைந்தார்.

அவரை 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலுவைக் கைது செய்தனர்.

English summary
An youth was beaten for trying to convincing a clashing couple near Kallakurichi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X