For Daily Alerts
Just In
நாம பயிற்சி கொடுக்கலைன்னா சீனா பயிற்சி கொடுக்கும்.. சொல்வது சுதர்சன நாச்சியப்பன்!
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் உள்ள 49 லட்சம் தமிழ் குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. இதனால் இலங்கை தமிழர் பிரச்னையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதை எதிர்க்கின்றனர். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.
Comments
English summary
Union State Minister Sudharsana Nachiyappan has defended training for Sri Lanka in India.