கஞ்சா விற்ற அதிமுக முன்னாள் மகளிரணி நகரச் செயலாளர் கைது
Subscribe to Oneindia Tamil
குளித்தலை: கஞ்சா விற்றதாக அதிமுக முன்னாள் மகளிரணி நகரச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் அருகில் உள்ள மலையப்ப நகரைச் சேர்ந்த பிச்சையம்மாள் (52). இவர் அதிமுக முன்னாள் நகர மகளிர் அணியின் நகரச் செயலாளர் ஆவார்.
குளித்தலை போலீஸாருக்கு, இவரது வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையில் போலீஸார், இவரது வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார், பிச்சையம்மாளை கைது செய்து, குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி லதா வழக்கை விசாரித்து, பிச்சையம்மாளை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பிச்சையம்மாள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications