For Quick Alerts
For Daily Alerts
Just In
கேதார்நாத் வெள்ளத்தில் மாயமான பெற்றோர்.. மனமுடைந்த பெண் தற்கொலை
கேதார்நாத்: உத்தர்காண்ட்டை உருக்குலைத்துப் போட்டு கேதர்நாத்தை நிர்மூலமாக்கிய பெருவெள்ளத்தில் பெற்றோரை தொலைத்த மத்திய பிரதேசத்து பெண் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மத்திய பிரதேசம் குவாலியரைச் சேர்ந்த நாதுராம் பராஷரும் அவரது மனைவி கமலா தேவி மற்றும் உறவினர்கள் கடந்த 15-ந் தேதி இமயமலை யாத்திரைக்காக புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இவர்கள் அனைவரும் சிக்கியுள்ளனர். கடந்த 15 நாட்களாக பெற்றோரைத் தேடும் பணியில் மும்முர ம் காட்டினார் நாதுராமின் மகள் மமதா திரிபாதி.
ஆனால் மமதாவின் முயற்சிக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. இதனா.ல் விரக்தி அடைந்த மமதா நேற்று தமது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
Comments
English summary
After failing to trace her parents,who had gone to Kedarnath pilgrimage, a 35-year-old woman allegedly committed suicide in Gwalior, police said on Saturday.
Story first published: Saturday, June 29, 2013, 15:45 [IST]