நரேந்திர மோடியின் அலுவலகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு!
குஜராத் தலைநகர் காந்திநகரில் புதிய தலைமைச் செயலகத்துக்குள் வெள்ளிக்கிழமையன்று 35 வயது மதிக்கத்தக்க சென்றிருக்கிறார். முதலாவது சோதனை தடுப்பைத் தாண்டி சென்றிருக்கிறார். பின்னர் மற்றொரு சோதனை தடுப்பில் அவர் நுழைந்தபோது எச்சரிக்கை அலாரம் அடிக்க தலைமைச் செயலகம் பரபரப்பானது.
பின்னர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அவரிடம் நீண்ட கத்தி இருந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சூரத்தைச் சேர்ந்த ஜூபேரியா உஸ்மான் ஹபிஜ் என்பதும் தெரியவந்தது. தாம் முதல்வர் மோடியை சந்தித்து குறை கேட்க வந்ததாகவும் காய்கறி நறுக்கவே கத்தி வாங்கியதாகவும் அப்பெண் கூறியிருக்கிறார். ஆனால் இதை ஏற்க மறுத்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.