எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஒரு மரணம்... விபத்தா, தற்கொலையா... மக்கள் போராட்டத்தால் பரபரப்பு!
எக்ஸ்பிரஸ் அவென்யூவின் 3வது மாடியிலிருந்து நேற்று மாலை திடீரென ஒரு இளைஞர் கீழே விழுந்தார். இதையடுத்து பதறிப் போன பொதுமக்கள் விரைந்து சென்று அவரைப் பார்த்தனர். அவரது சட்டைப் பையில் இருந்த ஐடி கார்டில் சண்முகம், சாப்ட்வேர் என்ஜீனியர் என்ற விவரங்கள் இருந்தன.
போலீஸாருக்குத் தகவல் போனது.. அவர்கள் விரைந்து வந்தனர். சண்முகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது போலீஸாருக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது தகவல் சொல்லியவுடன் போலீஸார் வராதது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு போலீஸ் தரப்பில் காட்டமாக பதிலளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் ஆவேசமாகப் பேசினர். அவர்களை அதிகாரிகள் அமைதிப்படுத்தினர்.
சண்முகத்தை போலீஸார் காப்பாற்ற முயற்சிக்கவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கேஸை மூ்டப் பார்க்கின்றனர். போலீஸார் துரிதமாக செயல்பட்டிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்பது பொதுமக்கள் தரப்பு குற்றச்சாட்டாகும்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.