தசைப்பிடிப்புடன் 3வது திருமண நாளை கொண்டாடிய 'தல' டோணி
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி இன்று தனது 3வது திருமண நாளை கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தனது காதலி சாக்ஷியை கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி மணந்தார். ஜூலை 3ம் தேதி அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. மறுநாள் திருமணம் நடந்தது.
அவர்களின் திருமணத்தை டோணியின் தோழியான பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
படித்துக் கொண்டிருந்த சாக்ஷி
திருமணத்தின்போது சாக்ஷி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர்களின் திருமணம் டேராடூனில் நடந்தது.
ஐபிஎல் போட்டிகளில் சாக்ஷி
ஐபிஎல் போட்டிகளின்போது சாக்ஷி பார்வையாளர்கள் இருக்குமிடத்தில் இருந்து கொண்டு செய்யும் செய்கைகள் ஊடகங்களில் பிரபலமாகின.
டோணி காயம்
டோணிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் மூன்று நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் விளையாடவில்லை. டோணியில்லாமல் அணி திணறிக் கொண்டிருக்கிறது.