For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்பால் விவகாரத்தில் துரோகம்.. மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்: அன்னா ஹசாரே

By Mathi
Google Oneindia Tamil News

Anna hazare
அலகாபாத்: வலுவான லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டதாகவும் இதனால் மத்திய அரசுக்கு எதிராக அடுத்த ஆண்டும் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாகவும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, பார்லிமென்ட்டில் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் இம்மசோதா விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட இதுவரை பிரதமர் அளித்த உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை.

லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. இதனைக் கண்டித்து 2014ஆம் ஆண்டு டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்றார்.

English summary
Accusing the Centre of "betrayal" on the Lokpal Bill, anti-corruption activist Anna Hazare on Friday threatened to launch a fresh stir at Ramlila ground in Delhi later in 2014 to raise the pitch over the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X