ஜெய்பூரில் மைனர் பேத்தியை 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்த 68 வயது தாத்தா கைது
ஜெய்பூர்: ஜெய்பூரில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் டீலா ராம்(68). ஓய்வு பெற்ற நாயப் சுபேதார். அவரது மகன் தனது குடும்பத்துடன் தௌசா மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவர் ஏழ்மையில் வாடுவதால் தனது மகளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்பூரில் உள்ள தந்தை வீட்டில் விட்டார். மனைவியை இழந்த டீலா ராம் பேத்தி தனது வீட்டில் தங்கி படிக்க வந்ததை தனக்கு சாதமாக எடுத்துக் கொண்டு அவரை கடந்த 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார். சிறுமி 12 வயதில் இருந்து கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இது குறித்து டீலா ராமிடம் பேசியும் பலனில்லை. டீலா ராம் தனது பேத்தியுடன் படிக்கும் மாணவி ஒருவரிடம் உனக்கு செல்போன் மற்றும் பிற பொருட்கள் வாங்கித் தருகிறேன் என்று நைசாக பேசியுள்ளார். ஆனால் அந்த சிறுமி டீலா ராமிடம் இருந்து தள்ளியே இருந்தார்.
இதற்கிடையே தாத்தாவின் தொல்லை தாங்க முடியாத சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் மனோஜ் குமார்(26) என்பவரிடம் உதவி கோரினார். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து சிறுமியை காணவில்லை என்று ஜோத்வாரா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறுமி மனோஜுடன் தௌசாவில் இருப்பது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை கடத்திய குற்றத்திற்காக மனோஜ் கைது செய்யப்பட்டார். மேலும் சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக டீலா ராம் கைது செய்யப்பட்டார்.