உணவு பாதுகாப்பு மசோதாவை பார்லி.யில் எதிர்க்கமாட்டோம்: ராஜ்நாத் சிங்
உணவு பாதுகாப்பு மசோதா பார்லிமென்ட்டில் நிலுவையில் இருக்கும் போது திடீரென இதற்காக அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்து சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மழைக்கால பார்லிமென்ட் கூட்டத் தொடரில் உணவு பாதுகாப்பு மசோதாவை நாங்கள் எதிர்க்க மாட்டோம். ஆனால் சில திருத்தங்களைக் கொண்டுவர வலியுறுத்துவோம். இந்த மசோதாவுக்காக அவசர சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயகத்தில் இது மிகப் பெரிய கூத்தாக இருக்கிறது.
பார்லிமென்ட் முடங்கிப் போவது காங்கிரஸ் கட்சிதான் காரணமே தவிர எதிர்க்கட்சிகள் அல்ல என்றார்.