For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலையில் அடிபட்டு இளவரசன் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

By Mathi
Google Oneindia Tamil News

தர்மபுரி: மர்மமான முறையில் இறந்த தர்மபுரி இளவரசன் தலையில் அடிபடே மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கியிருக்கும் தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை அவரது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளவரசன் தந்தை இளங்கோவிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ராகார்க் பிரேத பரிசோதனை அறிக்கையை கொடுத்தார்.

Ilavarasan

அந்த அறிக்கையில், இளவரசனின் உடல் திடமானதாகவே இருந்தது. இடது கை மணிக்கட்டு, உள்ளங்கைகளில் கிரீஸ் படிந்திருந்தது, கை விரல்களில் சிராய்ப்புகள் இருந்தன. இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கை வீங்கியிருந்தது. தலையின் முன் பகுதி மூக்குப் பகுதியில் சதை சிதைந்து இருந்தன. இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் மூளை கொண்டு வரப்பட்டது. அந்த மூளையில் ஜல்லி துகள்கள் ஒட்டியிருந்தன. மேலும் தலையில் பலத்த காயம் அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

English summary
The post-mortem report of the Dalit boy, who was feared to have committed suicide at Dharmapuri in Tamil Nadu, has claimed that the youth died of head injury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X