மானாமதுரையில் டி.எஸ்.பி வெள்ளைத்துரையை வாழ்த்தும் போஸ்டர்கள்
மானாமதுரை: டி.எஸ்.பி வெள்ளைத்துரையின் பணிக்கு வாழ்த்து தெரிவித்து மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சப்.இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலைக்குப் பின்னர் மானாமதுரை டி.எஸ்.பியாக பொறுப்பேற்றார் வெள்ளைத்துரை. இதனையடுத்து மானாமதுரை வட்டத்தில் உள்ள ரவுடிகள், குற்றவாளிகள் அனைவரும் அதிரடி நடவடிக்கைக்கு உள்ளானார்கள்.
பெண்கள் தங்களின் பிரச்சினைகளை நேரடியாக எடுத்துக் கொண்டு வெள்ளைத்துரையை சந்தித்து முறையிடுகின்றனர்.
டி.எஸ்.பியாக வெள்ளைத்துரை பொறுப்பேற்ற உடன் நிலமோசடி, கந்துவட்டி பிரச்சினை போன்றவைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் டி.எஸ்.பி வெள்ளைத்துரையை வாழ்த்தும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயமின்றி நடமாட உதவிய கண்ணியம் மிக்க மானாமதுரை துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரையின் பணி சிறக்க,பணி தொடர மனதார வாழ்த்துகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.