For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்'': தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், பாட்டிலுக்குள் பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 40 வயது மீனவர் இன்னாசி, மார்க்கெட் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். பின்னர் பாருக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பிராந்தியை குடிக்க உட்கார்ந்தார். பாட்டிலைத் திறக்க முயன்றபோது அதற்குள் சின்னதாக ஏதோ இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர்கள் நன்கு உற்றுப் பார்த்தபோது பாட்டிலுக்குள் கிடந்தது குட்டிப் பாம்பு என்று தெரிய வந்து அதிர்ந்தனர்.

அரை அடி நீளத்தில் அந்த பாம்பு செத்துப் போய்க் கிடந்தது. இதையடுத்து பாரில் இருந்த அத்தனை குடிகாரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் மது குடிப்பதை நிறுத்தினர். சிலரோ, பாம்புதானே தூக்கிப் போட்டுட்டு குடிப்பா என்பது போல தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர்.

மது பாட்டிலுக்குள் பாம்பு கிடந்தது குறித்து போலீஸில் புகார் தரப் போவதாக மீனவர் இன்னாசி தெரிவித்தார்.

மதுவை நிரப்பும்போது இந்த பாம்பையும் சேர்த்து மதுபான ஊழியர்கள் நிரப்பி விட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே மக்கள் குடித்துச் சாகிறார்கள். இந்த நிலையில் செத்துப் போன பாம்பையும் சாப்பிட்டு சாக வேண்டும் போல...

English summary
A smake snake was found dead in a tasmac liquor bottle near Rameswaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X