வினோதினி வழக்கு: குற்றவாளியிடம் 115 கேள்வி கேட்ட நீதிபதி
காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி திருவேட்டக்குடியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற சுரேஷ் (28). இவர் எம்எம்ஜி நகரில் வசித்து வந்த இன்ஜினியர் வினோதினியை ஒரு தலையாக காதலித்தார்.
அவரது காதலை ஏற்க வினோதினி மறுத்துவிட்டதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் மீது ஆசிட் வீசினார் சுரேஷ். இதில் படுகாயமடைந்த வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு காரைக்கால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே 24 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையிலிருந்து, 115 கேள்விகளை சுரேசிடம் நீதிபதி வைத்தியநாதன் கேட்டார். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு சுரேஷ் மறுப்பு தெரிவித்தார். இதன் அடுத்த கட்ட விசாரணையை வரும் 17ம்தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் காரைக்கால் நகராட்சி ஆணையர் ஆஜராகி சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியின் லேஅவுட் சமர்ப்பிப்பது குறித்து பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.