குண்டர் சட்டத்தில் நடிகை லீனா - சுகாஷ்! - போலீசார் ஆலோசனை
பெங்களூரை சேர்ந்தவர் சுகாஷ் சந்திரசேகர ரெட்டி அம்பத்தூர் மற்றும் சேலையூரில் உள்ள வங்கிகளுக்கு வி.ஐ.பி., குரலில் பேசி ரூ 20 கோடிக்கும் மேல் மோசடி செய்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். முதலில் சுகாஷ் சந்திரசேகர ரெட்டியின் காதலியான மலையாள நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர். பின்னர், சுகாஷ் சந்திரசேகர ரெட்டியை கைது செய்துள்ளனர்.
லீனா புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சுகாஷையும் இப்போது அதே சிறையில் அடைத்துள்ளனர். வரும் 15-ந்தேதி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக வரும் 15-ந் தேதி தாம்பரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், சுகாஷ் சந்திரசேகர ரெட்டியும், லீனா மரியாபாலும் பலரை மோசடி செய்துள்ளதால், அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.