For Daily Alerts
Just In
தெருக்களில் சாதிப் பெயரை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!
சென்னை: பொது இடங்களிலும் தெருக்களிலும் இருக்கும் சாதிப் பெயர்களை அகற்றக் கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை நந்தனம் தேவர் சிலை அருகே தமிழர் எழுச்சி இயக்கத்தினர் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நந்தனம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments
English summary
Tamilar Ezhuchi Iyakkam had protest to remove the caste name in public places