நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதலை நடத்தியதே ‘மத்திய அரசு’தான்!!!
டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான சட்டங்களைக் கொண்டுவரவே நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் மும்பை தாக்குதல் சம்பவங்களை மத்திய அரசே திட்டமிட்டு நடத்தியது என்று ஒரு அதிகாரியே 'திருவாய் மலர்ந்து' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் சம்பவத்தில் சிபிஐயும் உளவுத் துறையும் மோதிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தில் அண்டர் செக்ரெட்டரியாக பணியாற்றிய ஆர்.வி.எஸ். மணி என்பவரிடம் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் சம்பவத்தை விசாரித்த சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த சதீஸ் வர்மாதான் இந்தச் செய்தியை கூறியதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் உள்ளிட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் 2 பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று லஸ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிற பிரனேஸ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக்கின் தந்தை தாக்கல் செய்தது. மற்றொரு இஷ்ரத் ஜஹானின் தயார் தாக்கல் செய்தது.
இந்த இரண்டு வழக்குகளில் ஜாவேத் தொடர்பான வழக்கில் கர்னைல் சிங் என்பவர் தலைமையில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவையும், இஷ்ரத் தயார் தொடர்ந்த வழக்கில் குஜராத் அரசு மோகன் ஜா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்தன.
மோகன் ஜா சிறப்பு புலனாய்வுக் குழுவில் இஷ்ரத்தின் தயாரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் சதீஸ் வர்மா.
கர்னைல் சிங் மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட ஆர்.ஆர்.வர்மா தலைமையில் அக்குழு செயல்பட்டது. ஆர்.ஆர். வர்மா குழு, என்கவுன்ட்டர் போலியானது என்று அறிக்கை கொடுத்தது. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் சிபிஐக்கு வழக்கை மாற்றியும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது சிபிஐ விரும்பினால் சதீஸ் வர்மாவின் உதவியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூற சிபிஐ குழுவில் சதீஸ் வர்மாவும் இடம் பெற்றிருந்தார். அவரது பணிக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் போலி என்கவுன்ட்டரில் ஐபி அதிகாரிகளின் பங்கு பற்றி அதி தீவிரம் காட்டியதால் கடந்த மாதம் சிபிஐ குழுவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது குஜராத்தின் ஜூனாகத் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பணியாற்றி வருகிறார் சதீஸ் வர்மா.
உள்துறை செயலகத்தில் அண்டர் செகரட்டரியாக் இருந்த ஆர்.வி.எஸ். மணி தான், இஷ்ரத் என்கவுன்ட்டர் வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டவர். குஜராத்தின் காந்தி நகரில் கடந்த மாதம் 22ம் தேதி சதீஸ் வர்மாவிடம் மணி விசாரணை நடத்தியிருந்தார். அப்போதுதான் நாடாளுமன்ற மற்றும் மும்பை தாக்குதல்கள் திட்டமிட்டு மத்திய அரசால் நடத்தப்பட்டது என்று மணியிடம் சதீஸ் வர்மா கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் மீது 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது. 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து யுஏபிஏ என்ற புதிய சட்டம் கொண் டுவரப்பட்டது என்றும் சதீஸ்வர்மா தம்மிடம் கூறியதாக மணி தெரிவித்துள்ளார்.
மேலும் ஐபி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை நடத்தப்பட்ட என்கவுன்ட்டர்கள் குறித்தும் சதீஸ் வர்மா சந்தேகம் எழுப்பியதாகவும் கூறியுள்ளார் மணி. சர்ச்சைக்குரிய இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் தொடர்பான விசாரணையின் போது மணியிடம் சதீஸ் வர்மா இந்த தகவல்களை கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதலை நடத்தியதே அமெரிக்க அரசு தான் என்றும், நிலவுக்கு மனிதனை அமெரிக்கா அனுப்பவே இல்லை, ஒரு பாலைவனத்தில் செட் போட்டு ஏமாற்றியது என்றும் புரளி கிளப்புவோர் இருக்கிறார்கள். அதே மாதிரி தான் இதுவும்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications