For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகிய தினம்: 9வது ஆண்டு நினைவஞ்சலி

By Siva
Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் இறந்தனர். இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி செயல்பட்டு வந்தது. போதிய வசதிகள் இன்றி செயல்பட்டு வந்த அப்பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அப்பள்ளியில் படித்த குழந்தைகளில் 94 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.

தமிழகத்தையே கவலையில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.

கருகிய 94 அரும்புகள்

கருகிய 94 அரும்புகள்

பள்ளியில் இருந்தவர்களில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

18 பேர் படுகாயம்

18 பேர் படுகாயம்

பள்ளியில் தீப்பிடித்த உடன் குழந்தைகள் அடித்து பிடித்து வெளியே ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

இன்று 9வது ஆண்டு நினைவு அஞ்சலி

இன்று 9வது ஆண்டு நினைவு அஞ்சலி

அந்த 94 குழந்தைகள் இறந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இறந்த குழந்தைகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

English summary
Today is the 9th anniversary of the Kumbakonam school fire tragedy victims. Fire that broke out in Srikrishna school consumed the lives of 94 kids in 2004.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X