For Quick Alerts
For Daily Alerts
Just In
காங்கோவில் ராணுவ தாக்குதலில் 120 தீவிரவாதிகள் பலி
காமா: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடந்த ராணுவ தாக்குதலில் எம்23 தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 120 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக மார்ச் 23 அல்லது எம்23 என்ற அமைப்பு போராடி வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தீவிரவாதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து காமா பகுதியின் வடக்கில் உள்ள பல கிராமங்கங்களை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அந்த கிராமங்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ராணுவத்தினர் 12 பேர் உயிர் இழந்தனர்.
Comments
English summary
120 M23 rebels were killed after a clash broke out between the Congo army and the rebels on sunday afternoon.
Story first published: Tuesday, July 16, 2013, 15:02 [IST]