For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவிஞர் வாலி மறைவுக்கு ஆளுநர் ரோசய்யா இரங்கல்!

By Shankar
Google Oneindia Tamil News

Governor Rosayya condoles for Vaali
சென்னை: கவிஞர் வாலியின் மறைவுக்கு ஆளுநர் ரோசய்யா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பாடல்கள் ஒரு மனிதனின் இதயம் தொட்டதோடு புதிய செய்தியையும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வாலி மறைவு குறித்து கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழில் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் வாலியின் திடீர் மரணம் குறித்து கேள்விபட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தை தொட்டதோடு மட்டுமல்லாமல் ஒரு செய்தியையும் வழங்கியது.

கவிஞர் வாலியின் மறைவு, தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் கவிஞருக்கு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
TN Governor Rosayya deeply condoled for the death of Poet Vaali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X