புதிதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்.பி.க்கள் 26ம் தேதி டெல்லியில் பதவியேற்பு
டெல்லி: தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் வரும் 26ம் தேதி டெல்லியில் பதவியேற்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான அதிமுகவின் இளவரசன், மைத்ரேயன், திமுகவின் கனிமொழி, திருச்சி என். சிவா, காங்கிரசின் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா ஆகியோரின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 7 பேர் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் அதிமுகவைச் சேர்ந்த அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோரும், திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்களும் வரும் 26ம் தேதி டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளனர். மாநிலங்களவை செயலகத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகின்றது.