For Daily Alerts
Just In
சென்னை உள்பட 7 ஏர்போர்ட்டுகளை தாக்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் குவஹாத்தி ஆகிய 7 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் சிறிய ரக விமானங்களை பயன்படுத்தி விமான நிலையங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகள் விமானத்தையும் கடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் புதிய வகை வெடிகுண்டுகளை பயன்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
English summary
According to intelligence sources, terrorists are planning to attack seven airports including the one in Chennai.
Story first published: Sunday, July 21, 2013, 12:22 [IST]