ஆக.8ல் டெசோவின் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! டெல்லியில் பார்லி. முன்பு போராட்டம்!!
சென்னை: 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 8-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் டெல்லியில் பார்லிமென்ட் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
திமுக தலைமையகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்., ஜூலை 16ந் தேதி நடைபெற்ற டெசோ கூட்டத்தில், இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தமிழக மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல டெசோ இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 8ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.எசொ
அன்றைய தினம், டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி திமுக மக்களை, மாநிலங்களவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு டி.ஆர்.பாலு தலைமை வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.