மேத்யூஸ் ‘காதல்’ திருமணம்: பக்சேவும், தம்பி கோத்தபயாவும் சாட்சிக் கையெழுத்து...!
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆஞ்செலோ மேத்யூஸ்-ன் காதல் திருமணத்தில் சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளார்கள் இலக்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது தம்பியுமான இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும், ராஜபக்சே அன் கோவுக்கும் நல்ல நெருக்கம், பழக்கம் உண்டு. அதை மாத்யூஸின் திருமணம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, ராஜபக்சே கட்சியில் எம்.பியாக இருக்கிறார். இந்த நிலையில் மாத்யூஸின் காதல் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டுள்ளார் ராஜபக்சே.
பள்ளித் தோழி...
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனான ஆஞ்செலோ மேத்யூஸ்,தனது பள்ளி கால தோழியான ஹெஷானி சில்வாவை மணந்துள்ளார்,.
பம்பாலபிட்டியில்..
கடந்த வெள்ளிக்கிழமையன்று பம்பாலாபிட்டியாவில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.
ராஜபக்சே - கோத்தபயா சாட்சி
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இந்தக் காதல் திருமணத்திற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு துறை மந்திரி கோத்தபய ராஜபக்சே சாட்சிக் கையெழுத்திட்டனர்.
அதிபரே வந்துட்டாரே...
அதிபரும், அவரது தம்பியும் நேரில் வந்து சாட்சிக் கையெழுத்து போட்டதால் மாத்யூஸ் தரப்பு ரொம்ப மகிழ்ச்சியாகி விட்டதாம்.