ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு வைகோ நேரில் ஆறுதல்
சேலம்: சேலத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷின் வீட்டுக்கு சென்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஆறுதல் கூறினார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஈரோடு, திருப்பூரில் நிதி சேகரிப்பு கூட்டங்களை முடித்துவிட்டு இன்று காலை சேலம் வந்தார். காலை 9.30 மணியளவில், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட ப.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கே, ரமேஷின் மனைவி சுபாவிடம் துக்கம் விசாரித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ரமேஷ் நல்ல மனிதர், சிறந்த பன்பாலர் எனக்கு அவரை நன்றாக தெரியும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும், பா.ஜ.க. கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருபோதும் இதுபோன்ற அரசியல் படுகொலைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த கொலையில் ஈடுபட்ட கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.