For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்கத்தாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியை மானபங்கப்படுத்திய குடிகாரன்

By Siva
Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தா ஹெளரா ரயில் நிலையம் அருகே மும்பையைச் சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 32 வயது டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, அவரது தந்தை மற்றும் நண்பருடன் கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க சென்றார். நேற்று இரவு அவர்கள் ஹெளரா ரயில் நிலையம் அருகே சென்றனர். அப்போது குடிபோதையில் ஒருவர் அந்த பெண்ணை மானபங்கப்படுத்தியுள்ளார். அவரை காரில் இருந்து வெளியே இழுத்துள்ளார். இதை பார்த்து அங்கு கூடியவர்களில் ஒரு குழு அந்த குடிகாரருக்கு ஊக்கமளித்துள்ளது. அந்த குஷியில் அவர் அப்பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளார்.

இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரத்தன் சாஹூ என்பவரை கைது செய்தனர்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெளரா மாவட்டத்தில் உள்ள பேலூர் ரயில் நிலையம் அருகே தன்னை மானபங்கப்படுத்தியவரிடம் இருந்து தப்பிக்க 25 வயது சாப்ட்வேர் என்ஜினியர் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Mumbai-based TV anchor was allegedly molested by an inebriated man who was later arrested, police said Wednesday. The incident happened Tuesday night near the Howrah railway station. The anchor, her father and friend were on a visit to the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X