For Daily Alerts
Just In
போதைப்பொருள் என நினைத்து ‘பிறந்த குழந்தை’யின் அஸ்தியைத் திருடிய இளைஞர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில், போதைப்பொருள் இருப்பதாக கற்பனை செய்து தவறுதலாக அஸ்தி இருந்த பர்ஸை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் வசித்து வருபவர் மோனிகா தாமஸ் என்ற பெண்மணி. இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிறந்து சில மணி நேரங்களிலேயே, மரணமடைந்தது அந்த ஆண் குழந்தை. ஆனபோதும் குழந்தையை பிரிய மனம் வராத அந்த தாய், குழந்தையின் அஸ்தியை ஒரு சிறிய டப்பாவில் போட்டு, அதன் மீது அக்குழந்தையின் பெயர் மற்றும் பிறப்பு, இறப்பு விஷயங்களை எழுதி வைத்திருந்தார்.
அதனை எப்போதும் தனது பர்ஸிலேயே வைத்திருந்தார் மோனிகா. அதனைத் தவறுதலாக போதைப் பொருள் என கருதிய இளைஞர் ஒருவர் மோனிகாவின் பர்ஸை திருடிச் சென்று விட்டார்.
போலீஸ் தேடுதல் வேட்டையில் சிக்கிய அந்த இளைஞன், தனது தவறை ஒத்துக் கொண்ட போதிலும், திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.
Comments
English summary
A purse snatched from the arms of a young woman in the U.S. contained the ashes of her deceased newborn baby.