For Daily Alerts
Just In
நாங்கள் என்ன சோதனை விலங்குகளா? நாய்க்கு கொடுங்கள் உங்கள் மதிய உணவை... : சீறும் ம.பி ஆசிரியர்கள்
கடந்த வாரத்தில், உணவு விஷமானதால் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவ-மாணவிகள் பரிதாபமாக பலியாகினர். அந்த பள்ளியின் தலைமையாசிரியையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஆசிரியர்கள் உணவை ருசி பார்த்த பின்னரே, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது மத்தியப்பிரதேச அரசு. இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜபல்பூர் ஆசிரியர்கள், ‘ மாணவர்களின் உயிர் முக்கியம் தான். ஆனால், அதற்காக ஆசிரியர்கள் சோதனை விலங்குகள் ஆக முடியாது. வேண்டுமானால், சமைத்த உணவை முதலில் ஒரு தெருநாய்க்கு வழங்கிப் பார்க்கலாம். பின்னர், 20 நிமிடம் காத்திருந்து, அதற்கு ஒன்ரும் நேரவில்லையென்றால், அந்த உணவை மாணாவர்களுக்கு தரலாம்' எனத் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Teachers in Jabalpur, Madhya Pradesh would rather have dogs taste midday meals than be guinea pigs themselves.
Story first published: Sunday, July 28, 2013, 11:59 [IST]