அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க கோரி கி.வீரமணி போராட்டம்
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க கோரி சென்னையில் திராவிடர் கழரக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆகஸ்ட் 1ல் போராட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து சைதைப்பேட்டை செயலாளர் மு. மகேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
திமுக தலைவர் கருணாநிதி ஆதரவோடு வரும் ஆகஸ்டு 1ம் தேதி அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிட உரிமைப்போர் மற்றும் அறப்போராட்டம் நடை பெற உள்ளது.
இந்த அறப் போராட்டத்தில் தலைமைக்கழக செயற் குழு உறுப்பினர், பொதுக் குழு உறுப்பினர், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டச்செயலாளர்கள், மாவட்டக்கழகப்பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், சார்புமன்ற நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள், பகுதிப்பிரதி நிதிகள், கழக முன்னோடிகள் பெருந்திரளாக பங்கேற்று அறப்போராட்டம் வெற்றி அடையச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.